தி.மு.க.பிரமுகர் மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

Madipakkam Selvam DMK-தி.மு.க.பிரமுகர் மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.;

Update: 2022-04-26 07:15 GMT

Madipakkam Selvam DMK-தி.மு.க. பிரமுகரான செல்வம் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மடிப்பாக்கம் அருகே அவரது கட்சி அலுவலகத்தின் அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

உள்ளாட்சித் தேர்தல் தேதி நெருங்கி வந்த நிலையில் தி.மு.க பிரமுகர் கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக  போலீசார் 6 தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வந்தனர். மேலும், அவரது மனைவிக்கு மடிப்பாக்கம் பகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் சீட் ஒதுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அரசியல் ஆதாயத்திற்காக இந்தக் கொலை அரங்கேற்றப்பட்டதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 3 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே கூலிப்படையைச் சேர்ந்த விக்னேஷ், புவனேஷ்வர், சஞ்சய், கிஷோர் உள்ளிட்ட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து கூலிப்படையைச் சேர்ந்த மற்றொரு நபரான அருண் என்பவர் பிப்ரவரி 15 ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். முருகேசன் தான் கூலிப்படையின் தலைவன் என்பதால் போலீசார் சரணடைந்த அருணை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கிஷோர் என்பவர் மடிப்பாக்கம் செல்வத்தை கொலை செய்ய தங்களை வரவழைத்ததாகவும் கொலைக்கான காரணம் தங்களுக்கு தெரியாது எனவும் அருண் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த கூலிப்படை தலைவனான முருகேசனை தனிப்படை போலீசார் மார்ச் 13ம் தேதி வியாசர்பாடியில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட முருகேசன் ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்ற அடிப்படையிலும், அவர்தான் மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட கூலிப்படையின் தலைவன் என்பதால், கொலைக்கான காரணம் குறித்து இரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.

முருகேசன்  அளித்த வாக்குமூலத்தில் மடிப்பாக்கம் குபேரன் நகரில் உள்ள 4 கிரவுண்ட் இடம் தொடர்பாக செல்வம் மற்றும் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி முத்து சரவணன், பாபண்ணன் ஆகியோருக்கு தகராறு ஏற்பட்டதாகவும், அந்த இடத்தில் கூலிப்படை தலைவன் முருகேசன் இரண்டு முறை பெயர்பலகையை வைத்த போது அதனை செல்வம் பிடுங்கி போட்டதாகவும், இதனால் ரவுடி கும்பல் கடும் கோபத்திற்கு சென்றதாகவும், இதன் காரணமாக செல்வத்தை போட்டு தள்ள முடிவு செய்து பிரபல ரவுடி முத்து சரவணன் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடித்ததாகவும், அனைவருக்கும் வாட்ஸாப் காலில் தான் அனைத்து வேலைகளையும் கொடுத்ததாகவும், மற்ற விவரங்கள் ஏதும் தெரியாது என்று கூறியுள்ளார்.

அதனடிப்படையில் முத்து சரவணனை மடிப்பாக்கம் போலீசார் அமைந்தகரையில் வைத்து கடந்த 20ம் தேதி கைது செய்து 6 நாட்களாக விசாரணை மேற்கொண்டதில் முருகேசனுக்கு தான் எல்லாம் தெரியும் என்று கூறியுள்ளார். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News