மாநகர பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவன் தவறி விழுந்து காயம்

Update: 2022-09-09 05:00 GMT

மாணவன் தவறி விழுந்த மாநகர பேருந்து.

சென்னை பள்ளிகரணை அடுத்த மேடவாக்கம் சந்திப்பில், தடம் எண் 99 பேருந்து நேற்று மாலை 6.30 மணியளவில் தாம்பரத்திலிருந்து அடையார் நோக்கி வந்த போது சம்பவ இடத்தில், படியில் பயணம் செய்து கொண்டிருந்த ஆர்யா(14), என்ற அரசு பள்ளி மாணவன் பேருந்தில் இருந்து கீழே விழுந்து இடுப்பு மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

மேடவாக்கம் கூட் ரோட்டில் பேருந்தில் ஏறி கலைஞர் நகரில் உள்ள வீட்டுற்கு சென்ற போது சம்பவம் நிகழ்ந்துள்ளது.9ம் வகுப்பு பள்ளி மாணவர் தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக பள்ளிகரணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News