கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி; இருவர் உயிரிழப்பு

Latest Suicide News -கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் இருவர் பலி. இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-09-20 05:04 GMT

ராம்குமாரின் வீடு.

Latest Suicide News -ருவில் வசித்து வருபவர் ராம்குமார்(35), இவர் தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவருடன் அவரது தாய் மீனாட்சி(60), மற்றும் அக்கா சந்தானமாரி(40), அவரது மகள் சண்முகபிரியா(20), ஆகியோர் வசித்து வந்தனர்.

ராம்குமாருக்கு அதிகளவில் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், இன்று மதியம் 12 மணியளவில் தான் பணிபுரியும் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு இன்று வேலைக்கு வரவில்லை என்றும் நாங்கள் அனைவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

உடன் பணிபுரிபவர்கள் வந்து பார்ப்பதற்குள் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உடனடியாக நீலாங்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்து அவர்கள் வந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து பரிசோத்தித்து பார்த்ததில் சந்தானமாரி மற்றும் சண்முக பிரியா இருவரும் இறந்திருந்தனர்.

ராம்குமாரும், அவரது தாய் மீனாட்சியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக நீலாங்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News