மாநில அளவிலான குத்துசண்டை போட்டி: அனகாபுத்தூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தங்கம்

மாநில அளவிலான குத்துசண்டை போட்டியில் அனகாபுத்தூர் அரசுப்பள்ளி மாணவர்கள் தங்க பதக்கம் வென்றனர்.

Update: 2021-12-05 06:45 GMT

திருப்பூரில் நடந்த மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டியில் செங்கல்பட்டு அனகாபுதூர் அரசு பள்ளி மாணவர்கள் தங்க பதக்கம் வென்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், அனகாபுத்தூர மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இவர்கள் குத்து சணடை விளையாட்டில் ஆர்வம் காட்டியதால் பெற்றோர்கள் பம்மலில் உள்ள பயிற்ச்சியாளர் டி.எஸ்.பார்த்தசாரதியிடம் முறையான பயிற்ச்சியை மேற்கொண்டனர்.

இந்நிலையில் திருப்பூரில் நடைபெற்ற மாநில அ|ளவிலான குத்துசணடை போட்டியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் தயாநிதி, 11 ஆம் வகுப்பு படிக்கும் டேஷ்சஞ்சய், 9 ஆம் வ்குப்பு படிக்கும் கோகுல்நாத், மற்றும் ராகுல் ஆகிய நால்வரும் பங்கேற்றனர். இவர்கள் போட்டியில் கலந்து கொண்டு  தங்கபதக்கம் வென்றனர்

இவர்களை அனகாபுத்தூர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜிவாஅர்ஷன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News