பறவைகள்- விலங்கினங்கள் அறக்கட்டளை சார்பில் பல்வேறு பழவகை மரகன்றுகள் நடவு

பறவைகள் மற்றும் விலங்கினங்கள் அறக்கட்டளை சார்பில் பல்வேறு வகையாக பழவகை மரகன்றுகள் நடவு செய்தனர்

Update: 2021-10-04 00:45 GMT

பறவைகள் மற்றும் விலங்கினங்கள் அறக்கட்டளை சார்பில், பல்லாவரம் ஏரிக்கரை பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன

செங்கல்பட்டு மாவட்டம்,  பல்லாவரம் ரேடியல் சாலை அருகே ஏரிகரை ஓட்டிய பகுதிகளில் பறவைகள் மற்றும் விலங்கினங்கள் அறக்கட்டளை சார்பில், பல்லாவரம் ஏரிகரை ஓட்டிய பகுதிகளில், பல்வேறு வகையான பழவகை மரகன்றுகள் நடும் நிகழ்வு, பிளக்ஸ் மென்பொருள் நிறுவன துணைத் தலைவர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராக மாலதி கலந்து கொண்டு, நிகழ்ச்சியை துவக்கி வைத்து பறவைகள், விலங்கினங்களின் வாழ்வாதாரம் மேம்பட பல்வேறு வகையான பழவகை மரங்கள் நட்டனர். இதில் அறக்கட்டளை நிர்வாகிகள், சமுக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை, பறவைகள் மற்றும் விலங்கினங்களின் அறக்கட்டளைத் தலைவர் வில்சன்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.

Tags:    

Similar News