பம்மலில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார நடைபயணம்

பம்மலில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார நடைபயணம் நடைபெற்றது.

Update: 2021-11-24 17:00 GMT
பம்மலில் காங்கிஸ் கட்சி சார்பில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார நடைபயணம் நடைபெற்றது.

விலைவாசி உயர்வு மற்றும் மத்திய பாஜக அரசை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் பம்மல் நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பம்மல் பாலு அவர்களின் தலைமையில்  மக்கள் விழிப்புணர்வு பிரச்சார நடைபயணம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் ஆர்.எஸ் செந்தில்குமார்  கலந்துகொண்டு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். இந்தப் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இந்த நடைப்பயணமானது பம்மல் பேருந்து நிலையம் அருகே உள்ள சங்கர் நகர் காவல் சோதனைச் சாவடி தொடங்கி பம்மல் நகராட்சி வரையில் நடைபெற்றது இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News