இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் உயிரிழப்பு

இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் உயிரிழந்தார். இது தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-01-23 02:15 GMT

இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த பெயிண்டர்.

சென்னை அசோக் நகர் ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது-31) இவரது மனைவி சூர்யா (வயது-24) இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது.அருண்குமார் போரூர் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏசி மெக்கானிக் ஆக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனா காலத்தில் வேலையின்றி வருமையில் இருந்துள்ளார்.இதனால் அருண்குமார் அவரது சித்தப்பாவுடன் பெயிண்ட் வேலை செய்து வந்துள்ளார். குரோம்பேட்டையில் சோழவரம் நகர் நேரு தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி கட்டிடத்தில் இரண்டாம் தலத்தில் பெயிண்ட் வேலை செய்து கொண்டு இருக்கும் போது ஏனி மூலமாக கீழே இறங்க முயற்சித்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

உடனே அங்கிருந்த பொது மக்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த அருண்குமாரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பறிசேதனை செய்த மருத்துவர்.ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

உடனே இதுகுறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனை அனுப்பி வைத்தனர், மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News