தாம்பரம் பகுதியில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டும்: பாஜக மாநில தலைவர் எல்.முருகன்

Update: 2021-06-07 09:36 GMT

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை பகுதியில் உள்ள கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 20 லட்சத்துக்கு மேலான மருத்துவ உபகரணங்களை வழங்கினார். தமிழக பாஜக மாநில தலைவர் எல். முருகன் பின்னர் செய்தியாளர் சந்தித்த அவர்:

திமுக தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார் ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகியும் இன்னும் வழங்கப்படவில்லை உடனடியாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் பன்னோக்கு மருத்துவமனை சென்னையை சுற்றி அதிகம் இருப்பதால் தாம்பரம் பகுதியில் ஒரு பல்நோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டும் தமிழக அரசை நாங்கள் வலியுறுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை சுற்றியுள்ள ஏரிகளுக்கு நீர் வரத்து குறைந்ததால் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட துணை தலைவர் ஓம் சக்தி செல்வமணி, மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News