வியாபாரியை கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: விக்ரம ராஜா பேட்டி

வியாபாரியை படுகொலை செய்த குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரம ராஜா தெரிவித்தார்.

Update: 2021-07-19 11:30 GMT

குரோம்பேட்டையில் கொலை செய்யப்பட்ட வியாபாரியின் குடும்பத்தினரை வணிக சங்க பேரமைப்பு தலைவர் ப விக்ரம ராஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை சேர்ந்த அரிசி வியாபாரி ஆனந்தராஜ். நேற்று மாலை தனது கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது, வழிமறித்த இளைஞர் சரமாரிய ஓடஒட விரட்டி படுகொலை செய்தனர். 

இந்தநிலையில் இது தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் மற்றும் சதீஷை கைது செய்து விசாரணை நடித்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கொலை செய்யப்பட்டாரின் குடும்பத்தினரை வணிக சங்க பேரமைப்பு தலைவர் ப விக்ரம ராஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுபோன்ற குற்ற சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டுமெனவும்,

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றால் தமிழகம் முழுவதும் வணிகர் சங்கம் சார்பில் மாபெரும் போராட்டம்  நடத்தப்படும் என தெரிவித்தார்,

அதுமட்டுமின்றி குரோம்பேட்டை பகுதியில் அதிக அளவில் கஞ்சா போதைக்கு அடிமையாகி இருக்கும் இளைஞர்கள் தான் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்,

இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க காவல்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Tags:    

Similar News