பல்லாவரத்தில் இந்திய தேசிய லீக் கட்சி ஆர்ப்பாட்டம்

பல்லாவரத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைறெ்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Update: 2021-12-12 03:00 GMT
பல்லாவரத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்.

செங்கல்பட்டு மாவட்டம், அடுத்த பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகே செங்கல்பட்டு மற்றும்.காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் இந்திய தேசிய லீக் கட்சியினர் தமிழக அரசு ஆயுள் கைதிகளை விடுதலை செய்யும் அரசானையை அறிவித்து அதில் இஸ்லாமிய ஆயுள் கைதிகளை விடுதலை புறகணிப்பு செய்துள்ளதை கண்டித்து செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ரஹமத்துல்லா தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக சரவணன், சீராளன் கலந்து கொண்டு இஸ்லாமிய ஆயுள் கைதிகள விடுதலை செய்யகோரி கண்டன பாதகைகள் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் காஞ்சி மாவட்ட தலைவர் அன்சாரிபாய், மாவட்ட தலைவர் இதயதுல்லா, மாவட்ட நிர்வாகிகள் இளைஞரணி தலைவர் இம்ரான், மாவட்ட செயலாளர் வசீம் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் ரஹமத்துல்லா பேசுகையில் தமிழக அரசு இஸ்லாமிய ஆயுள் கைதிகளை விடுதலை புறகணிப்பால் இஸ்லாமியர்களை வஞ்சிக்கிறது எனவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இஸ்லாமியர்களை விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்து இந்த சமூகத்திற்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளார். 

வருகின்ற உள்ளாட்சி தேர்தலுக்குள் அரசாணையை திருத்தி கோவை பாஷாபாய் உட்பட இஸ்லாமியர்களை விடுதலை செய்ய உத்திரவாதம் அளிக்க வேண்டும், அவ்வாறு இல்லையெனில் சிறுபான்மையாக உள்ள இஸ்லாமியரின் ஓட்டுக்கள் சிதறி எதிகட்சியாக பிரதிபலிக்கும் என கூறினார்.

Tags:    

Similar News