சென்னை சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

குரோம்பேட்டையில் இயங்கி வரும் சரவணா ஸ்டோர்ஸில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2021-12-01 04:45 GMT

சென்னை குரோம்பேட்டையில் இயங்கி வரும் சரவணா ஸ்டோர்ஸ்.

குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறையினர் சோதனை. 

சென்னை குரோம்பேட்டையில் இயங்கி வரும் சரவணா ஸ்டோர்ஸில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சோதனை நடைபெறும் காரணத்தினால் விற்பனை நடைபெறவில்லை, வாடிக்கையாளர்கள் வந்து திரும்பிச் செல்கின்றனர். 

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு சோதனையானது நடைபெற்று வருகிறது. அதே போல் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களிலும் இந்த சோதனை நடபெற்று வருகிறது.

Tags:    

Similar News