செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக சார்பில் ஆலோசனை கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-09-12 15:45 GMT

பால்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், பால்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் தனியார் மண்டபத்தில் செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் ஊராட்சி ஓன்றிய தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் எவ்வாறு செயல் ஆற்றுவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் ஊராட்சி ஒன்றிய அனைத்து வார்டுகளில், வார்டு உறுப்பினர் மற்றும் தலைவர்களுக்கான அனைத்து வார்டுகளிலும் வேட்பாளர் நிறுத்தபடுவதாக ஆலோசனை கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றபட்டது.

மேலும் மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் வாக்காளர் பட்டியலை நிர்வாகிகளுக்கு வழங்கினார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ்பிரபாகரன், மாணவரணி செயலாளர் கந்தகுருநாதன், மீனவரணி துணைச் செயலாளர் கஜேந்திரன், மற்றும் ரகுமான், டில்லிபாபு, சக்திவேல், குன்றதூர் ஒன்றிய செயலாளர் கங்காதர பாண்டியன், திருப்போரூர் ஒன்றிய செயலாளர் கோபிநாத், காட்டாங்கொளத்தூர், ஒன்றிய செயலாளர் எத்திராஜ், பம்மல் ராஜ் உட்பட கழக நிர்வாகிகள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News