குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் மதுபோதையில் வாலிபர் ரகளை

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் மதுபோதையில் வாலிபர் ரகளை

Update: 2021-08-21 13:15 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டையில்,  தேனி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் இவரது தந்தை லட்சுமணன் இவர் குரோம்பேட்டை காவல் நிலையம் எதிரே குடிபோதை காரணமாக தன்னை தானே அறுத்துகொண்டாரா, கீழே விழுந்து காயங்ள் ஏற்படனவா என தெரியா நிலையில் ரத்தவெள்ளத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு அச்சுறுத்தை ஏற்படுத்தியுள்ளார்.

சுமார் ஒரு மணி நேரமாக குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் போதை வாலிபர் அங்கும் இங்குமாக அலைந்தபடியே வாகன ஓட்டிகளுக்கு அச்சிறுத்தலை ஏற்படுத்தி உள்ளார், குடிபோதையில் தான் என்ன செய்கிறோம் என்ற நிலையில் உள்ள இவரால் ஜி.எஸ்.டி சாலையில் பெரும் பரப்பரப்பு காணப்பட்டது. இவரை கண்ட பொதுமக்கள் விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் அவசர உதவி 100 எண்ணிற்கு போன் செய்து தகவல் அளித்தனர் விரைந்து வந்த குரோம்பேட்டை காவல்துறையினர் காயமுற்ற மதுபோதை ஆசாமி சுரேஷ்சை 108 ஆம்புலன்ஸ் முலம் முதலுதவி சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News