தாம்பரம் அருகே அதிவேகமாக சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து, பெண் பலி, 3 பேர் படுகாயம்

தாம்பரம் அருகே அதிவேகமாக சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் சம்பவ இடத்தில் ஒரு பெண் பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2021-07-15 09:30 GMT

தாம்பரம் அருகே அதிவேகமாக சென்று கவிழ்ந்த ஆட்டோ.

சென்னை குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் சுந்தர்ராஜன் இன்று காலை தனது மனைவி லட்சுமி (42) மற்றும் 2 பேருடன் தனது ஆட்டோவில் தாம்பரம் தர்காஸ் சாலை கிஷ்கிந்த அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற லாரியினை முந்த முயன்ற போது நிலைதடுமாறி  ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.  அதில் பயணித்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் ஆட்டோ ஓட்டி வந்த சுந்தர்ராஜன் மற்றும் ஆட்டோவில் பயணித்த இருவர் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். . சமபவம் குறித்து சோமமங்கலம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News