மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உதவி ஆணையர் பாராட்டு

மாநில அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உதவி ஆணையர் பதக்கம் வழங்கி பாராட்டினார்.

Update: 2021-12-13 07:00 GMT

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றிப் பெற்ற சிறுமியை பாராட்டிய போலீஸ் உதவி கமிஷனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த  பம்மல் முத்தமிழ் நகரில் சிறுவர் சிறுமியருக்கு சதிஷ் என்பவர் சிலம்பம் கற்றுக்கொடுத்து வருகிறார்.

இவரிடம் சிலம்பம் கற்கும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற தமிழ்நாடு சிலம்பம் அசோசியேசன் உடுமலைபேட்டையில் நடத்திய போட்டியில் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதிலுமிருந்து 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் பல்லாவரம் சுற்று வட்டார பகுதியில் மட்டும் சுமார் 30 பேர் வெற்றி பெற்றனர்.

போட்டிகள் வயது மற்றும் எடைக்கேற்ப நடத்தப்பட்டது.இதில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியர்களுக்கு பல்லாவரம் உதவி ஆணையர் ஆரோக்கிய ரவிந்திரன் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். மாணவர்கள் சிலம்பம் சுற்றியும், கயிறு ஏறுதல், தற்காப்பு போன்றவற்றை செய்து காண்பித்து அசத்தினர்.

Tags:    

Similar News