கத்தி முனையில் மிரட்டி செல்போன், பைக் பறித்த ஆசாமிகள் கைது

குரோம்பேட்டையில் பட்டாக்கத்தி முனையில் மிரட்டி செல்போன், பைக் பறித்து சென்ற ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-23 07:00 GMT

போலீசாரால் கைது செய்யப்பட்ட வழிப்பறி திருடன்

செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையை சேர்ந்தவர் லோகேஷ்(32). இவா் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.லோகேஷ் நேற்று முன்தினம் இரவு நாகல்கேணி அக்கீஸ்வரர் காலனிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.

நாகல்கேணி அண்ணா சாலை போலீஸ் பூத் அருகே வந்த போது,மா்ம ஆசாமிகள் 2 போ் பட்டாக்கத்தியை காட்டி,லோகேஷ்சை வழிமறித்தனா்.


பின்பு கத்தி முணையில் மிரட்டி,லோகேஷ்சின் செல்போன்,மற்றும் பைக்கை பறித்துக்கொண்டு தப்பியோடினா்.

இதுபற்றி லோகேஷ் சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசாா் ஆய்வு செய்தனா்.

அப்போது வழிப்பறி கொள்ளையில் ஈடுப்பட்டது,பம்மலை சேர்ந்த ஆட்டோ டிரைவா் ஏஜாஸ்(27), மற்றும் அவரது நண்பா் ஜெயசூர்யா(21) என்று தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்தனர்.

ஏஜாஸ் மீது ஏற்கனவே செல்போன் திருட்டு வழக்கு உள்ளது தெரியவந்தது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடமிருந் லோகேஷ்சின் பைக் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.இருவரையும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News