தமிழக ஆன்மீக முன்னணி புலனம் குழு சார்பில் தமிழ் நாள்காட்டி வெளியீட்டு விழா

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த கடமலை புத்தூரில் தமிழக ஆன்மீக முன்னணி புலனம் குழு சார்பில் தமிழ் நாள்காட்டி வெளியீட்டு விழா நடைபெற்றது.

Update: 2021-06-24 07:53 GMT

செங்கல்பட்டு மாவட்டம்  கடமலை புத்தூரில் தமிழக ஆன்மீக முன்னணி புலனம் குழு சார்பில் நடந்த  தமிழ் திருவள்ளுவர் ஆண்டு நாள்காட்டி வெளியீட்டு விழா .

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த கடமலை புத்தூரில் தமிழக ஆன்மீக முன்னணி புலனம் குழு சார்பில் தமிழ் திருவள்ளுவர் ஆண்டு நாள்காட்டி வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு ஸ்ரீ சின்னகவி ஸ்ரீராமஜெயம் வெளியீட,  இந்து புரட்சி முன்னணி மாநில துணைத் தலைவர் கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி, முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் செந்தமிழ்அரசு, இந்து முன்னணி ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ், விக்னேஷ், சதீஷ்குமார், சாமிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து சின்னகவி சிராமஜெயம் தாயார் அற்புதம்மாள் நினைவு நாளையொட்டி சிறுதாமூர் சிவனடியார் ரவி தலைமையிலான சிவனடியார் கூட்டம் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

அதன் பின்னர் வீடற்ற ஏழைகள், தெருவோர வியாபாரிகள், மனநலம் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News