அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் கைது

அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் கைது

Update: 2021-08-03 13:30 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தின் 534/2014 வழக்கில் தேடப்பட்டு வந்த கொலை குற்றத்துக்கான குற்றவாளி உத்தமநல்லூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன், மற்றும் 259/2013 வழக்கில் தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி இந்தலூர் கிராமத்தை சேர்ந்த ராஜா ஆகிய இருவரையும் அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் ஜா.இளவரசன் தலைமையில் கொண்ட போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News