எடையாளம் ஊராட்சியில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி சிறப்பு முகாம்

எடையாளம் ஊராட்சியில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2021-11-30 06:30 GMT

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எடையாளம் ஊராட்சியில் கால்நடைகளுக்கு கோமாரி சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எடையாளம் ஊராட்சியில் கால்நடைகளுக்கு கோமாரி சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

அப்போது அச்சிறுப்பாக்கம் கால்நடை மருத்துவமனை மூலம் சிறப்பு மழைக்கால கோமாரி தடுப்பூசி முகாமினை கால்நடை மருத்துவர் எ.ராஜன் உதவி மருத்துவர் எம்.பாபு ஆகியோரின் தலைமையில் கால்நடை ஆய்வாளர் எஸ்.ஏழுமலை முன்னிலையில் முகாம் நடத்தப்பட்டது.

இதில் பழைய எடையாளம், புதிய எடையாளம், உள்ளிட்ட விவசாயிகளின் 300,க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தினர். மேலும் இம்முகாமிற்கான ஏற்பாட்டினை எடையாளம் ஊராட்சி மன்ற தலைவர் என்.பெருமாள் செய்திருந்தார். அப்போது கிராம பொதுமக்கள் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து சிகிச்சை பெற்று சென்றனர்.

Tags:    

Similar News