திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் தரிசனம் ரத்து

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-18 05:45 GMT

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழக அரசு திருக்கோயில்களில் வெள்ளி சனி ஞாயிறு பக்தர்கள் தரிசனத்திற்கு தடைவிதித்துள்ளது. அதனை செயல்படுத்தும் விதமாக படாளம் அருகே உள்ள திருமலை வையாவூர் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் அக்டோபர் 31 வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று கோயில் செயல் அலுவலர் இரா.சரஸ்வதி செய்திக்குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய மூன்று நாட்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஆ கவே பொதுமக்கள் அரசின் உத்தரவை ஏற்று ஒத்துழைப்பு தருமாறு, கோவில் நிர்வாகம்  கேட்டுக் கொண்டுள்ளது. 

Tags:    

Similar News