காட்டுக்கரணை ஊராட்சியில் புதிய 3 மின்மாற்றி திறப்பு

காட்டுக்கரணை ஊராட்சியில் புதிய 3 மின்மாற்றி திறக்கப்பட்டது.

Update: 2021-10-20 12:15 GMT

காட்டுக்கரணை ஊராட்சியில் தலைவராக பதவி ஏற்றவுடன், டிரான்ஸ் பார்மர் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊராட்சி தலைவர்தர்மராஜ்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுக்கரணை. இவ்ஊராட்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஜெ.தர்மராஜ் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு 698 வாக்குகளில் வெற்றி பெற்று பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதற்கான பதவி ஏற்கும் நிகழ்ச்சியில்  நேற்று உதவி தேர்தல் அலுவலர் பு.வெங்கடேசனிடம் சான்றினை பெற்றுகொண்டார்.

இதனை தொடர்ந்து காட்டுக்கருணை ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர், காந்தி நகர், ராமபுரம் எல்லைபகுதி, ஆகிய மூன்று பகுதிகளில் புதிய மின் மாற்றியை ஊராட்சி மன்ற தலைவர் தர்மராஜ் முன்னிலையில் உதவி பொறியாளர் ஆனந்தன் தலைமையில் திறந்துவைத்தனர். அப்போது லைன்மேன் கேசவன் உட்பட மின்சாரத் துறை ஊழியர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News