அச்சரப்பாக்கம் குடிசைப்பகுதி மக்களுக்கு மது ஒழிப்பு விழிப்புணர்வு!

அச்சரப்பாக்கம் குடிசைப்பகுதி மக்களுக்கு போலீசார் சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2021-05-23 12:03 GMT

பொதுமக்களுக்கு மது ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் குடிசை பகுதி மக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அறிமுகப்படுத்திய புதிய புகார் தெரிவிக்க தொலைபேசி எண் பொதுமக்களுக்கு தெரிவித்தல், மது குடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என பொதுமக்களிடையே அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் சரவணன், விழிப்புணர்வு அறிவுரை ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்றி முக கவசம் அணிந்து பங்கேற்றனர்.

Tags:    

Similar News