அச்சிறுப்பாக்கம்: நகைக்காக அக்காவை கொன்று நாடகமாடிய தம்பி கைது
மதுராந்தகம் அருகே, நகைக்காக அக்காவை கொன்று நாடகமாடிய தம்பி, அச்சிறுப்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.;
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் அருகே உள்ளது, அம்மணம்பாக்கம் கிராமம். அங்கு வசிப்பவர் செல்லம்மாள் 58 கடந்த 2ஆம் தேதி, அவரது வீட்டில் தலையின் பின்பு ரத்தம் சொட்டிய நிலையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து, சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து, அச்சிறுப்பாக்கம் போலீசார் விசாரித்து வந்தனர்.
இதில், சந்தேகத்தின் அடிப்படையில் அவரது தம்பி சுப்பிரமணியை விசாரணை செய்தனர். இதில், சுப்பிரமணி கொலை செய்தது தெரியவந்தது. மேலும், சொத்து கேட்டு அடிக்கடி சுப்பிரமணி பிரச்சினை செய்ததாகவும், பணம் மற்றும் நகை கேட்டதற்கு செல்லம்மாள் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த, இரும்பால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார், சுப்பிரமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.