அரசு பேருந்து கவிழ்ந்து 10க்கும் மேற்பட்டோர் காயம்

Update: 2021-02-01 09:15 GMT

அச்சிறுப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பேர்கண்டிகை என்ற இடத்தில் திண்டிவனத்தில் இருந்து 40 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த அரசுப்பேருந்து தனது முழு கட்டுப்பாட்டை இழந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.

இதில் பயணம் செய்தவர்களில் சுமார் 10 பேர் காயம் அடைந்து உள்ளனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மேல்மருவத்தூர் மற்றும் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News