உடையார் பாளையம் அருகே முந்திரி தோப்பில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

உடையார் பாளையம் அருகே முந்திரி தோப்பில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-12-29 08:43 GMT

அரியலூர் மாவட்டம்  உடையார்பாளையம் கீரைகார தெருவைச் சேர்ந்தவர் சேகர் மனைவி சாவித்திரி(55). இவர்களது மகன்  கார்த்திகேயன்(27). இவர் திருமணம் செய்து வைக்க கோரி தினமும் குடிபோதையில் தாய் சாவித்திரியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கார்த்திகேயன் தாய் சாவித்திரியிடம் சாப்பாடு செய்து வைக்குமாறு கூறி விட்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பின்னர் நேற்று மதியம் உடையார்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது முந்திரி கொல்லையில் கார்த்திகேயன் கைலியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கினார்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி, கார்த்திகேயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் கார்த்திகேயன் தாய் சாவித்திரி கொடுத்த புகாரின் பேரில், போலீசார்  வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News