சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

வெண்மான்கொண்டான் பெரிய ஓடை பாலத்தடுப்பில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் நீலமேகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Update: 2022-04-11 13:47 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்த அணிக்குறிச்சி மேலத் தெருவைச் சேர்ந்தவர் ராஜாங்கம் மகன் நீலமேகம்(31).  இவரது மனைவி கீதா(27). இவர்களுக்கு ஹரீஸ்(4) என்ற மகன் உள்ளார்.  இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் (சிங்கப்பூர்) கூலிவேலை பார்த்து வந்த நீலமேகம் சொந்த ஊருக்கு வந்துள்ளார். 

இந்நிலையில் இன்று சித்தப்பா வெங்கடாசலம் என்பவருக்கு கடலை அறைக்க உதவியாக நீலமேகம் வெண்மான்கொண்டான் சென்றுள்ளார். கடலை அறைத்து விட்டு வெங்கடாசலம் சரக்கு ஆட்டோவில் சென்று விட்டார். நீலமேகம் அவரது பைக்கில் அணிக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்த போது, வெண்மான்கொண்டான் பெரிய ஓடை பாலத்தில் உள்ள தடுப்பில் எதிர்பாராத விதமாக பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நீலமேகம் கீழே விழுந்ததில் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News