சாமி கழுத்தில் இருந்த தாலிகாசு, குண்டுமணி உள்ளிட்ட 22கிராம் நகை திருட்டு

வடுகர்பாளையம் மாரியம்மன் கோயிலில் சாமி கழுத்தில் இருந்த தாலி, காசு, உள்ளிட்ட 22கிராம் தங்கம், 30 ஆயிரம் பணம் திருட்டு.

Update: 2022-06-27 07:36 GMT

திருட்டு நடைபெற்ற கோயிலில் சோதனையிடும் போலீசார். 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வடுகர்பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில், சாமி கழுத்தில் இருந்த தாலி, காசு, குண்டுமணி உள்ளிட்ட 22 கிராம் தங்கம் மற்றும் உண்டியலில் இருந்த சுமார் 30 ஆயிரம் பணம் மர்ம நபர்களால் திருடப்பட்டது. இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News