பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய கணித ஆசிரியர் போக்சோவில் கைது

சுந்தரேசபுரம் கிராமத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்திய கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-11 13:06 GMT

கைது செய்யப்பட்ட ஆசிரியர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சுந்தரேசபுரம் கிராமத்தில் ஜெயம்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் உரிமையாளரின் உறவினரான தினேஷ் அதேப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக மாணவியின் பெற்றோர் பலமுறை கண்டித்தும் அதனை பொருட்படுத்தாமல் போனிலும் நேரிலும் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.இதனால் பெண்ணின் பெற்றோர்கள் மாணவியை பள்ளியில் இருந்து படிப்பை இடையில் நிறுத்தி விட்டனர். இருந்தபோதிலும் தினேஷ் தொடர்ந்து போனில் மாணவியை தொடர்பு கொண்டு பேசி வந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து மாணவியிடம் ஆசிரியர் தினேஷ் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு பேசியதால் மாணவியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.இது குறித்து புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலிசார் தினேஷ் மீது வழக்கு பதிந்து போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News