விடுதலைசிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி பா.ம.க.புகார்

பா.ம.க. மீது வீண் பழி சுமத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி பா.ம.க. புகார் அளித்தது.

Update: 2022-06-29 08:06 GMT

வி.சி.க. நிர்வாகிகள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


அரியலூர் மாவட்டம் கழுவன்தோண்டி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி அக்கட்சியினர் சுவர் விளம்பரம் செய்திருந்தனர். இதை மர்ம நபர்கள் சிலர் அழித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பா.ம.க. தான் காரணம் என கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொல். திருமாவளவன் பிறந்த நாளையொட்டி எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தை அளித்த பா.மக..வினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில் பா.ம.க. மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வீண்பழி சுமத்தி வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்டு வருகின்றனர். பா.ம.க. நிர்வாகிகள் மீது பொய்யான விமர்சனங்களை எழுப்பிய விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த குமார், வானதிராயன்பட்டினம் முத்துகிருஷ்ணன், தா.பளூர் தங்கராசு, தழுதலைமேடு பூராசாமி ஆகியோர் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினர்.

சமூக நீதியை நிலைநாட்ட, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ரவிசங்கர் தலைமையில் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் பா.ம.க.வினர் புகார் அளித்தனர்.

Tags:    

Similar News