ஜெயங்கொண்டத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பு

நரிக்குறவர்கள் குடியிருப்புகளுக்கு சென்று உதயசூரியன் சின்னத்திற்கு,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வாக்குசேகரித்தார்/

Update: 2022-02-13 05:43 GMT

ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 4-வது வார்டு தி.மு.க. வேட்பாளராக நிர்மலா செல்வம் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக மகிமைபுரம் பகுதியில் வாழும் நரிக்குறவர்கள் குடியிருப்புகளுக்கு சென்று உதயசூரியன் சின்னத்திற்கு,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன்  வாக்கு சேகரித்தார்.

Tags:    

Similar News