தி.மு.க. வேட்பாளர்களுக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வாக்கு சேகரிப்பு

ஜெயங்கொண்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

Update: 2022-02-15 13:55 GMT

ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வாக்கு சேகரித்தார்.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து பேசினார். உடன் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News