மதுபாட்டிலில் பாம்பு- இளைஞர் மயக்கம்

Update: 2021-04-15 11:00 GMT

அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி கிராமத்தில் உள்ள ஒரு டாஸ்மாக்கடையில் வாங்கிய மது பாட்டிலில் இறந்த பாம்பு குட்டி இருந்ததால் அதிர்ச்சியில் மயக்கமடைந்தவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ளோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (36) என்பவர் சுத்தமல்லி பகுதியில் உள்ள ஒரு அரசு டாஸ்மாக் மதுக்கடையில் மதுப்பாட்டிலை வாங்கிகொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் மது அருந்தும் போது மது பாட்டிலில் பாம்பு குட்டி ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சுரேஷ்க்கு மயக்கம் ஏற்பட்டதால் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.தற்போது சுரேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மது பாட்டிலில் பாம்பு குட்டி இறந்து கிடந்தது அப்பகுதி குடிமகன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News