மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

மாற்றுத்திறனாளி நபர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணியை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் துவக்கி வைத்தார்

Update: 2021-05-25 07:54 GMT

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுகாதாரத்துறையின் மூலம் 18 முதல் 44 வயதுடைய முன்னுரிமை நபர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் த.ரத்னா தலைமைதாங்கினார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தடுப்பூசி செலுத்தும் பணியை துவக்கி வைத்தார்.

இம்முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர்கள் அனைவருக்கும் ஆக்சிஜன் அளவு, இரத்த அழுத்தம் உள்ளிட்டவைகள் பரிசோதனைகள் செய்யப்பட்டு, தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்ததாவது,

இங்கு மாற்றுத்திறனாளிகள், முன்கள பணியாளர்கள்,பொதுமக்களுடன் அதிக அளவில் இணைந்து பணியாற்றும் நபர்களுக்கு கோவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெறவிரும்பும் பயனாளிகள் அனைவரும் தங்களது நிறுவனம் அல்லது அரசு வழங்கியுள்ள அடையாள அட்டையுடன் சென்று கோவிட்-19 தடுப்பூசி செலுத்தி, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்தார்.

Tags:    

Similar News