ஜெயங்கொண்டம் நகராட்சி முழுமை திட்ட வரைவு ஆலோசனைக் கூட்டம்

ஜெயங்கொண்டம் நகராட்சி முழுமை திட்ட வரைவு ஆலோசனைக் கூட்டம் நகர் ஊரமைப்பு துறை இணை இயக்குனர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2022-08-17 11:47 GMT

ஜெயங்கொண்டம் நகராட்சி முழுமை திட்ட வரைவு ஆலோசனைக் கூட்டம் நகர் மன்ற துணைத் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.


ஜெயங்கொண்டம் நகராட்சியில் ஜெயங்கொண்டம் நகராட்சி முழுமை திட்ட வரைவு ஆலோசனைக் கூட்டம் நகர் மன்ற துணைத் தலைவர் கருணாநிதி, நகர் ஊரமைப்பு துறை இணை இயக்குனர் ஸ்ரீதரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் சித்ரா, பில்டிங் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப்பணிகள், அதன் தற்போதைய நிலை மற்றும் நகர வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நகராட்சி உறுப்பினர்கள் தங்களது வார்டு மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News