மாணவர்கள் மத்தியில் இணைய குற்றங்கள் குறித்து போலீசார் விழிப்புணர்வு

விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இணையக் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.;

Update: 2022-03-25 06:24 GMT

சைபர் கிரைம் பற்றி மாணவர்கள் மத்தியில் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இணையக் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ஞா.செங்குட்டுவன், இணையக் குற்றங்கள் எவ்வாறு நடக்கிறது என்றும், இணையக் குற்றங்களில் இருந்து எவ்வாறு எச்சரிக்கையாக இருப்பது என்பது குறித்தும், மேலும் இணையதளத்தில் குற்றவாளிகள் மூலம் பண இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930 க்கு உடனடியாக தகவல் அளிப்பது குறித்தும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

Similar News