தா.பழூர் அருகே காயங்களுடன் கிடந்த மயில் வனத்துறையிடம் ஒப்படைப்பு

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே காயம்பட்டு கிடந்த தேசியப்பறவை மயில் மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பக்கப்பட்டது.

Update: 2022-01-02 03:14 GMT

தா. பழூர் அருகே காயம்பட்ட மயில் வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள விக்கிரமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மயில்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்நிலையில்  விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த செல்வமுருகன்(27) என்பவர் இரட்டை குளம் அருகே உள்ள தனது வயல் வெளியை பார்ப்பதற்காக  சென்றுள்ளார்.

அப்போது அவரது வயலின் அருகே 3 வயதுள்ள ஆண் மயில் ஒன்று உடலில் காயங்களுடன் கிடந்துள்ளது. மயிலை மீட்டு விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைக்க சென்றனர். பின்பு அரியலூரில் இருந்து வனத்துறை அதிகாரி வடிவேல் வரவழைக்கப்பட்டு அவரிடம் மயில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. பின்பு அவர் மயிலுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு நலமான பின்பு காட்டில் விடுவதாக கூறி எடுத்துச் சென்றார்.

கடந்த வாரம் இதேபோல் அப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கிடந்த மயிலை மீட்டு அப்பகுதி இளைஞர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News