சுதந்திரதினவிழா: ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் தேசிய கொடியேற்றினார்

75வதுசுதந்திரதினவிழாவை முன்னிட்டு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் தேசியகொடியேற்றி, மாணவிகளுக்குஇலவச மிதிவண்டிகளை வழங்கினார்

Update: 2022-08-15 10:35 GMT

ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 75 -வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு தேசிய கொடியேற்றி, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் வழங்கினார்.


ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 75 -வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு தேசிய கொடியேற்றி, மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் .கண்ணன் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் ஆசிரியை சம்மனசு வரவேற்புரையாற்றினார்.

பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் அருட்சகோதரி ஆன்செலினா முன்னிலை வகித்தார்.

பாத்திமா சமுதாயக்கல்லூரி முதல்வர் அருட்சகோதரி தாசில்லா,புனிதம் அங்காடி உரிமையாளர் சாகுல் ஹமீது, தலைமை ஆசிரியை அமலோற்பவமேரி, 21-வது நகர் மன்ற உறுப்பினர் துர்கா ஆனந்த் மற்றும் அருட்சகோதரிகள், ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News