விவசாயிகள் முதல் நாளே டோக்கன் பெற வேண்டும்

ஜெயங்கொண்டம் ஓழுங்குமறை விற்பனை கூடத்திற்கு விளைப் பொருட்களை கொண்டு வரும் விவசாயிகள் முதல் நாளே டோக்கன் பெற வேண்டும்.

Update: 2021-05-18 06:27 GMT

ஜெயங்கொண்டம் அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது.

ஜெயங்கொண்டம் அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விளைபொருட்களை விற்பனைக்கு எடுத்துவர விரும்பும் விவசாயிகள் அதற்க்கு முதல் நாள் 11 மணியளவில் அலுவலகத்திற்க்கு நேரில் வந்து டோக்கன் பெற்றுக்கெள்ள வேண்டும்.

ஒரு நாளைக்கு 50 டோக்கன் மட்டுமே வழங்கப்படும். டோக்கன் இல்லாதவர்கள் அனுமதிக்கப் படமாட்டார்கள். கொரானா தடுப்பு நெறிமுறைகளை விவசாயிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

ஒரு நபருக்கு ஒரு டோக்கன் மட்டுமே வழங்கப்படும். ஆனால் எத்தனை மூட்டைகள் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். ஒரு டோக்கனுக்கு அதிகபட்சமாக 2 லாட்டுகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

(முதல் தரம் மற்றும் இரண்டாம் தரம்). விளைபொருளை விற்பனைக்கு எடுத்து வருபவர்கள் காலை 08:45 மணிக்குள் கொண்டுவந்தால் போதுமானது.

அதிகாலையிலோ அல்லது முதல் நாளோ வந்து சிரமப்படவேண்டாம். மேற்கண்ட தகல்கள் அனைத்தும் அரசின் நிபந்தனைகளுக்குட்பட்டு மாறுதலுக்குள்ளானது.

Tags:    

Similar News