ஜெயங்கொண்டத்தில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி

முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாமினை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.

Update: 2022-01-10 06:21 GMT

ஜெயங்கொண்டம் நகர்ப்புற மருத்துவமனையில் முன் கள பணியாளர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இன்று வழங்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,ஜெயங்கொண்டம் நகர்ப்புற மருத்துவமனையில், முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாமினை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் டாக்டர்.மேனகா, சுகாதார ஆய்வாளர் செல்வகாந்தி மற்றும் மாவட்ட துணை செயலாளர் மு.கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News