உடையார்பாளையம் கூட்டுறவு மருந்தகத்தை எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார்

அரியலூர் மாவட்டம்ட உடையார்பாளையம் கூட்டுறவு மருந்தகத்தினை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார்.

Update: 2021-12-16 14:46 GMT

உடையார்பாளையம் கூட்டுறவு மருந்தகத்தினை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார்.


அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் நகரில், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை சார்பில் உடையார்பாளையம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிமிடெட் துவங்கும் கூட்டுறவு மருந்தகத்தை, தமிழக முதல்வர் காணொலி வாயிலாக திறந்தார். இதனை தொடர்ந்து ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் குத்துவிளக்கு ஏற்றி மருந்தகத்தினை துவக்கி வைத்தார்.

முதல் விற்பனையை ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் தன.சேகர்  துவங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட துணை பதிவாளர்(பொ.வி.தி) அரப்பள்ளி, உடையார்பாளையம் பேரூர் செயலாளர் ப.கோபாலகிருஷ்ணன், கூட்டுறவு சங்க செயலாளர் தமிழ்மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News