அரியலூர் மாவட்டத்தில் இன்று 55 பேருக்கு கொரோனா

அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2021-06-30 15:36 GMT

அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில், கொரோனாவால் 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். மாவட்டத்தில் குணமடைந்து இன்று வீடு திரும்பியர்வர்கள் 87 பேர். மருத்துமனைகளில் 520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 14,861 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 14,130 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 211 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 9846, இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 4,88932; அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 29,730 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 1,557 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 28,054 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 119 பேர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்று கொரோணா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 2434 பேர். இதில் முதல் தடுப்பூசியை 2198 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை 236 பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News