மரம் வெட்டியதை கண்காணிக்க தவறிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

மரங்கள் வெட்டுவதை தடுக்கத்தவறிய அமீனாபாத் கிராம நிர்வாக அலுவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2021-12-25 10:45 GMT

கோப்பு படம் 

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 23.12.2021 அன்று, அமீனாபாத் கிராமம், ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள 2 பூவரசம், 1 வேப்பமரம், 2 வாதநார மரம் ஆகிய 5 மரங்களை உரிய அனுமதியின்றி கள்ளத்தனமாக வெட்டியதாக, அதே கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் மதியழகன் மற்றும் செல்வராஜ் மனைவி சகுந்தலா ஆகியோர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மரங்கள் வெட்டுவதை தடுக்கத்தவறிய அமீனாபாத் கிராம நிர்வாக அலுவலர், அரியலூர் வருவாய் கோட்டாட்சியரால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தடுக்கத்தவறிய சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோன்று கடந்த மாதம் அரியலூர் வட்டம், காவனூர் கிராமத்தில் உரிய அனுமதியின்றி மரம் வெட்டியதை கண்காணிக்க தவறிய கிராம நிர்வாக அலுவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News