டெல்லி மழை வெள்ளத்தில் கரைந்துபோன தன்யா சோனியின் ஐஏஎஸ் கனவு..!

ராவ்வின் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் மரணமடைந்த 21 வயது தன்யா சோனி யார்? அவரது பெற்றோரின் கண்ணீர் பேச்சு.

Update: 2024-07-29 13:50 GMT

Tanya Soni-UPSC Aspirant's Death in Tamil,Delhi,Basement library,Rau's IAS Study Circle

இருபத்தொரு வயதான தன்யா கவிதையை நேசித்தவர். யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று சிவில் சர்வீசஸில் சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

மழையால் டெல்லியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தின் அடித்தளம் வெள்ளத்தில் மூழ்கியதால் மரணமடைந்த மூன்று UPSC மாணவர்களில் ஒருவரான தன்யா சோனி, சிறுவயதிலிருந்தே மக்கள் குடிமைப்பணியில் சேர வேண்டும் என்று கனவு கண்டார்.

Tanya Soni-UPSC Aspirant's Death in Tamil

இருபத்தொரு வயதான தன்யா கவிதையை நேசித்தவர், யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று சிவில் சர்வீசஸில் சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். பீகார் மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த தன்யா டெல்லியில் வசித்து வந்தார். அவரது பெற்றோர் தெலுங்கானாவில் வசிக்கிறார்கள். அங்கு அவரது தந்தை வேலை செய்கிறார்.

சனிக்கிழமையன்று டெல்லியில் பெய்த கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய ராவ்வின் ஐஏஎஸ் படிப்பு வட்டத்தில் உள்ள அடித்தள நூலகத்தில் மூன்று யுபிஎஸ்சி மாணவர்களில், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் சிக்கி இறந்தனர்.

உயிரிழந்த மூவரும் 

இதுகுறித்து தான்யாவின் தந்தை விஜய் குமார் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது, 'தனது மகள் டெல்லியில் உள்ள கல்லூரியில் அரசியல் அறிவியலில் பிஏ பட்டம் பெற்ற பிறகு கடந்த ஒரு மாதமாக பயிற்சி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்தார்.

Tanya Soni-UPSC Aspirant's Death in Tamil

“தன்யா டெல்லியில் தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு அங்கு UPSC க்கு தயாராகிக்கொண்டிருந்தார். அவர் சிறுவயதிலிருந்தே (UPSC கிராக் செய்வதில்) அதிக ஆர்வம் கொண்டிருந்தார்,” என்று விஜய் தனது மகளின் உடலை டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு வர செல்லும் பயணத்தின் போது PTI இடம் கூறினார்.

தான்யாவின் மரணம் குறித்து அறிந்த அவரது குடும்பத்தினர் லக்னோவுக்கு ரயிலில் சென்றதாக அவர் கூறினார்.

"தன்யாவின் மரணம் குறித்து தகவல் கிடைத்ததும், நாக்பூரில் இறங்கி விமானத்தில் டெல்லி சென்றோம்" என்று கூறிய அவர், தான்யாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், "நாங்கள் பீகார் செல்லும் வழியில் உள்ளோம்" என்றும் கூறினார்.

Tanya Soni-UPSC Aspirant's Death in Tamil

குமார் தெலுங்கானாவில் உள்ள அரசு நடத்தும் சிங்கரேணி காலீரீஸ் கம்பெனி லிமிடெட் (எஸ்சிசிஎல்) நிறுவனத்தில் 25 வருடங்கள் பணிபுரிந்து தற்போது துணை பொது மேலாளராக உள்ளார். அவரது குடும்பம் மஞ்சேரியலில் வசித்து வருவதாக பிடிஐ தெரிவித்துள்ளது.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோர் தன்யாவின் மறைவுக்கு ஞாயிற்றுக்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கட்டிடத்தின் உரிமையாளர்கள் மற்றும் கட்டிடத்தின் கேட்டை சேதப்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் உட்பட 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மோசமான வடிகால் அமைப்பு, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமை மற்றும் விதிமுறைகளை பின்பற்றாததால் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Tags:    

Similar News