தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டும்தான்..!

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருகிறது. அதனால் பட்டாசு வெடிப்பதற்கு சிறுவர்கள் ஆர்வமாக தயாராகி வருவார்கள். பட்டாசு வெடிப்பதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Update: 2024-10-24 13:11 GMT

தீபாவளிக் கொண்டாட்டம்- கோப்பு படம் 

டெல்லி, தமிழ்நாடு, ஹரியானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் குளிர்காலம் நெருங்கி வருவதால் மாசு அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அந்த வகையில் தீபாவளியின் போது பட்டாசு உற்பத்தி, விற்பனை, சேமிப்பு மற்றும் பயன்பாட்டை உடனடியாக தடை செய்து மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இன்னும் தளர்வு அறிவிக்கப்படாததால் முடிந்தவரை பட்டாசு இல்லாத தீபாவளிக்கு மக்கள் தயாராக வேண்டும். காற்று மாசுபாடு மோசமாகி வருவதால், பெரும்பாலான மாநிலங்கள் இரவு 8 மணி முதல் 10 மணி வரை பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கின்றன. குறிப்பாக அதற்கும் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

டெல்லி

டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் கமிட்டி (டிபிசிசி) ஜனவரி 1, 2025 வரை தேசியத் தலைநகர் தில்லியில் அனைத்து வகையான பட்டாசுகளையும் உற்பத்தி செய்யவும், சேமிக்கவும், விற்பனை செய்யவும் , ஆன்லைன் தளங்கள் வழியாக விநியோகிக்கவும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

"பசுமை பட்டாசுகள்" மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பேரியம் மற்றும் ஈயம் போன்ற ஆபத்தான இரசாயனங்கள் இல்லாத பட்டாசுகள் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகின்றன.

தீபாவளியன்று (அக்டோபர் 31, 2024) இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரையும், குர்புராப் அன்று (நவம்பர் 15, 2024), காலை 4:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையும், இரவு 9:00 மணி முதல் 10 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும். மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை (டிசம்பர் 25-26, 2024) மற்றும் புத்தாண்டுக்கு (டிசம்பர் 31, 2024-ஜனவரி 1, 2025), இரவு 11:55 முதல் மதியம் 12:30 வரை.

தமிழ்நாடு - பசுமைக்கு முன்னுரிமை கொடுப்போம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசுபாட்டை தடுப்பதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (டிஎன்பிசிபி) விரிவான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தீபாவளி கொண்டாட்டத்தின் போது சத்தம் மற்றும் மாசு அளவைக் குறைப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புக்கொடுத்து வாரியத்தின் ஆலோசனையின்படி, பட்டாசுகளை வெடிக்கவேண்டும்.

அதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ள நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்கவேண்டுமாய் கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மற்றும் மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அந்த . அறிவுரையின்படி, சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்புகளை குறைப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தீபாவளி கொண்டாட்டத்தை பாதுகாப்புடனும் பட்டாசு வெடிப்பதற்கான பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றியும் கொண்டாடுவதற்காக அரசு பாதுகாப்பு விழிப்புணர்வு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக விலங்குகள் பறவைகளின் இருப்பிடச் சூழல் என்பதால் அவைகள் துன்புறாமல் பட்டாசு வெடிக்கலாம். மேலும் முடிந்தவரை பசுமை பட்டாசுகளை பயன்படுத்தலாம்.

மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளம்

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் (NGT) பரிந்துரைகளைத் தொடர்ந்து, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவும் பட்டாசு வெடிப்பதற்கு தடையை அமல்படுத்தி உள்ளதுடன் அங்கீகரிக்கப்பட்ட "பசுமை" பட்டாசுக்காய் மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பசுமை பட்டாசுகளைத் தவிர்த்து பிற பட்டாசுகள் விற்பனை மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தியுள்ளன.

பாரம்பரிய பட்டாசுகளுடன் ஒப்பிடும் போது, ​​இந்த பசுமை பட்டாசுகள் 30 சதவீதம் குறைவான மாசுவை உருவாக்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும், கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்படாத அண்டை மாநிலங்களில் இருந்து பட்டாசுகள் அடிக்கடி கடத்தப்படுவதால், அதை அமல்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப்

சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 இன் பிரிவு 5 இன் கீழ் மத்திய அரசு வழங்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாநில அரசு, உச்ச நீதிமன்றம் மற்றும் பஞ்சாபில் பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு கட்டுப்பாட்டு வரம்புகள் மற்றும் தடை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பட்டாசு பயன்பாடு தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. தீபாவளியன்று (அக்டோபர் 31) இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், காலை 4 மணி முதல் 5 மணி வரையிலும், மீண்டும் இரவு 9 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் குர்புராப் (நவம்பர் 15), மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு அன்று இரவு 11:55 முதல் 12:30 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுகிறது.

ஹரியானா

ஹரியானா மாநிலம் குருகிராமில், தீபாவளி இரவில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்காமல் பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பசுமை பட்டாசுகளைத் தவிர்த்து பிற பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று (23ம் தேதி) அறிவிக்கப்பட்ட விதியில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத "பசுமை" பட்டாசுகளை மட்டுமே சில பண்டிகைகளின் போது பயன்படுத்த முடியும்.

தீபாவளி, குர்புராப் மற்றும் கிறிஸ்துமஸ் சமயத்தில் மட்டுமே பட்டாசு பயன்படுத்த முடியும். தீபாவளி மற்றும் குர்புராப் நாட்களில் இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும், கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று இரவு 11.55 முதல் 12.30 மணி வரையிலும் பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்படும்.

Tags:    

Similar News