கர்நாடகாவில் 161 அடி ஆஞ்சநேயர் சிலை: பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

துமகூரு அருகே அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகவும் உயரமான ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக திறந்து வைக்கிறார்

Update: 2022-04-10 00:11 GMT

பிரதமர் திறந்து வைக்கவுள்ள 161 அடி ஆஞ்சநேயர் சிலை

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா பிதனகெரே கிராமத்தில் பசவேசுவரா மடம் உள்ளது. இந்த மடத்தில் 161 அடி உயரம் கொண்ட பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் உயரமான ஆஞ்சநேயர்  சாமி சிலையாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையை இன்று ராமநவமியையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக இந்த 161 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலையை திறந்து வைக்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு கர்நாடக முதல்வர்  பசவராஜ் பொம்மை தலைமை தாங்குகிறார். இதற்காக பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக துமகூருவுக்கு செல்ல இருக்கிறார். பின்னர் ஆஞ்சநேயர் சிலை திறப்பு விழாவில் அவர் கலந்து கொள்கிறார் 

Tags:    

Similar News