ரஷ்ய எண்ணெய் ஒப்பந்தத்தில் இந்தியா தடைகளை மீறவில்லை: அமெரிக்கா

அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது

Update: 2022-03-16 08:26 GMT

ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயை தள்ளுபடி செய்து வாங்குவது பொருளாதாரத் தடைகளை மீறுவதாக இருக்காது, ஆனால் அத்தகைய முடிவு இந்தியாவை வரலாற்றின் தவறான பக்கத்தில் வைக்கக்கூடும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

அனைத்து ரஷ்ய எரிசக்தி இறக்குமதிகளையும் அமெரிக்கா தடை செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு, கச்சா எண்ணெய் மற்றும் பிற பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்குவதற்கு ரஷ்யா வழங்கும் சலுகையை இந்தியா பரிசீலிப்பதாகக் கூறப்படும் செய்திகள் குறித்து கேட்டதற்கு, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, அமெரிக்கா விதித்துள்ள தடைகளை அனைத்து நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டும். இது தடையை மீறும் செயல் இல்லை என்றாலும், வரலாற்று புத்தகங்கள் எழுதப்படும் போது, பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்தும் ​​ரஷ்யாவிற்கு ஆதரவுயை எடுக்கும்போது நீங்கள் எங்கு நிற்க விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றியும் சிந்தியுங்கள் என்று கூறினார்.

அமெரிக்காவின் கடுமையான தடைகளுக்கு மத்தியில் ரூபாய்-ரூபிள் பரிவர்த்தனை மூலம் ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடியில் கச்சா எண்ணெய் மற்றும் தொடர்புடைய பொருட்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் மாஸ்கோவிற்கு எதிராக மேற்கு, ஐரோப்பா விதித்த பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றிற்கு மத்தியில் ரஷ்ய பொருளாதாரம் அதன் எண்ணெய்-எரிவாயு ஏற்றுமதியை பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யப் பொருளாதாரம் 1991ல் இருந்து அதன் மோசமான நிலையை எதிர்கொள்கிறது. எண்ணெய்-எரிவாயு ஏற்றுமதி மீதான தடைகளுக்குப் பிறகு இந்தியா தனது முதலீடுகளை அதிகரிக்குமாறு மாஸ்கோ வலியுறுத்தியுள்ளது.

ரஷ்யாவின் துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக் முன்னதாக ஒரு அறிக்கையில், மாஸ்கோவின் இந்தியாவிற்கான எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி 1 பில்லியன் டாலரை நெருங்கியுள்ளதாகவும், அதை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திங்கள்கிழமை ராஜ்யசபாவில், ரஷ்யா-உக்ரைன் மோதல்களுக்கு மத்தியில் எரிபொருள் வாங்குவதற்கான மாற்று சந்தையை அரசாங்கம் தேடுகிறது என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News