Driver Murdered Karnataka Government Officer-பெண் அதிகாரி கொலை : முன்னாள் ஓட்டுநர் ஒப்புதல்..!

வேலை தொடர்பான வாக்குவாதமே கர்நாடக அரசு அதிகாரி கொலைக்கு வழிவகுத்துள்ளதாக பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-11-06 12:50 GMT

driver murdered Karnataka government officer-கொலை செய்யப்பட பெங்களூரு அரசு அதிகாரி பிரத்திமா.(கோப்பு படம்)

Driver Murdered Karnataka Government Officer,Bengaluru police,Confession,Crime,Bengaluru News

நேற்று கொலை செய்யப்பட்ட கர்நாடக அரசு அதிகாரியின் ஓட்டுநர் குற்றத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாக பெங்களூரு போலீசார் தெரிவித்தனர். சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் பணிபுரியும் மூத்த புவியியலாளர் பிரத்திமா கே.எஸ் (43) பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

Driver Murdered Karnataka Government Officer

பெங்களூரு (தெற்கு) துணை போலீஸ் கமிஷனர் ராகுல் குமார் சஹாபுரவாட் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விசாரணைக்குப் பிறகு, முன்னாள் டிரைவர் அரசு அதிகாரி பிரத்திமாவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பல கோணங்களில் விசாரணை செய்த பிறகு, அந்த அதிகாரியால்  சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட அவரது முன்னாள் ஓட்டுநரை நாங்கள் சந்தேகித்து அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தோம். 

இறந்தவருக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக உயர் போலீஸ்காரர் மேலும் கூறினார். “அந்த துறையில்  ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த தனது டிரைவரை அந்தப் பெண் அதிகாரி பணிநீக்கம் செய்தார். சனிக்கிழமை இரவு, அவர் அந்தப் பெண் அதிகாரி வீட்டிற்குச் சென்று, தன்னை மீண்டும் வேலைக்கு அமர்த்துமாறு அவரிடம் கெஞ்சினார். அவர்  மறுத்ததால், குற்றம் சாட்டப்பட்டவர் அவரை  அந்த இடத்திலேயே கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ”என்று அவர் மேலும் கூறினார்.

கொலைக்கு அரசியல் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படும் கேள்விக்கு, டி.சி.பி., "இந்த கட்டத்தில், விசாரணையில் நாங்கள் கண்டறிந்தது இதுதான்" என்று கூறினார்.

Driver Murdered Karnataka Government Officer

குற்றம் சாட்டப்பட்டவர் சுப்ரமணியபுரா காவல் எல்லைக்கு உட்பட்ட தொட்டகல்லாசந்திராவில் உள்ள குவெம்பு நகரில் வசிப்பவர். புவியியலாளர் உடல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அவரது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் கழுத்தை நெரித்தும் கழுத்தை அறுத்தும் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூரு மாநகரில் பணிபுரிந்து வருவதால், பிரதிமா கடந்த நான்கைந்து ஆண்டுகளாக ஒரே வீட்டில் தனியாக வசித்து வந்ததாக டிசிபி குறிப்பிட்டார்.

Tags:    

Similar News