Covid-19 Vaccination-இளம் வயது இறப்புக்கு கோவிட்-19 தடுப்பூசி காரணமல்ல : ஐசிஎம்ஆர் தகவல்..!

கொரோனா தொற்று பரவல் காலத்தில் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்ட இளம் வயதினர் இறப்புக்கு கோவிட்-19 தடுப்பூசி காரணமல்ல என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Update: 2023-11-21 05:53 GMT

Covid-19 Vaccination- கோவிட்-19 தடுப்பூசி (கோப்பு படம்)

Covid-19 Vaccination,Sudden Deaths,Young Adults,India,Indian Council of Medical Research

இந்தியாவில் இளம் வயதினரிடையே விவரிக்கப்படாத திடீர் மரணங்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி காரணமல்ல என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஒரு விரிவான தடுப்பூசி ஆய்வில் தெரிவித்துள்ளது.

பிரபல மலையாள தொலைக்காட்சி நடிகை டாக்டர் ப்ரியா உள்ளிட்ட இளைஞர்கள் திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு திடீர் மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியான நிலையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Covid-19 Vaccination

இந்தியாவில் ஆரோக்யமான பெரியவர்களிடையே ஏற்படும் திடீர் மரணங்கள் பற்றிய அறிக்கைகள், அவை கோவிட்-19 அல்லது நோய்க்கு எதிரான தடுப்பூசியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற கவலையை எழுப்பியது. அதனால் இந்த ஆய்வை மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்களைத் தூண்டியது. 

Covid-19 Vaccination

'இந்தியாவில் 18-45 வயதுக்குட்பட்ட பெரியவர்களிடையே ஏற்படும் திடீர் மரணங்களுடன் தொடர்புடைய காரணிகள் -- ஒரு மல்டிசென்ட்ரிக் பொருத்தப்பட்ட வழக்கு-கட்டுப்பாட்டு ஆய்வு' என்ற தலைப்பில் ஐசிஎம்ஆர் ஆய்வு, திடீர் இறப்பு அபாயத்தை அதிகரிக்கக்கூடிய சில காரணிகளை எடுத்துக்கொண்டது.

இந்த காரணங்களில், கடுமையான கோவிட்-19 நோய்த்தொற்றின் வரலாறு, அதிகப்படியான குடிப்பழக்கம், போதை மருந்துகள் பயன்பாடு அல்லது போதை சார்ந்த பிற பொருட்களின் பயன்பாடு ஆகியவை 48 மணி நேரத்திற்குள் இறப்புக்கு காரணமாகும். இந்த மாத தொடக்கத்தில் முடிக்கப்பட்ட ஆய்வறிக்கை இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.

Covid-19 Vaccination

அக்டோபர் 1, 2021 மற்றும் மார்ச் 31, 2023 க்கு இடையில் விவரிக்கப்படாத காரணங்களால் திடீரென இறந்த 18-45 வயதுடைய ஆரோக்யமானவர்களின் அடிப்படை உடல்நலப் பிரச்னைகள் இல்லாத பாதிப்புகள் இந்த ஆய்வில் அடங்கும்.

முன்னதாக, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஐசிஎம்ஆர் ஆய்வை மேற்கோள் காட்டி, முன்னதாக கோவிட் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், மாரடைப்பு மற்றும் மாரடைப்பு ஏற்படாமல் இருக்க ஓரிரு வருடங்கள் அதிக உழைப்பை மேற்கொள்ளக் கூடாது என்றார்.

Tags:    

Similar News