மணிப்பூர் சம்பவத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

மணிப்பூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Update: 2023-10-18 09:00 GMT

மணிப்பூரில் குக்கி – மெய்தி பழங்குடியின சமூத்தினர் இடையே இருந்து வந்த மோதல்கள் கடந்த மே மாதம் வன்முறையாக வெடித்தது. ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். வன்முறை உச்சத்தில் இருந்த போது, Kangpokpi மாவட்டத்தில் மே 4ம் தேதி குக்கி பழங்குடியின இளம் பெண்கள் இருவரை வன்முறை கும்பல் ஒன்று ஆடைகளை களைந்து இழுத்துச் செல்லும் காணொளி, சமூக ஊடகங்களில் வெளியாகி உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பான புகாரை விசாரித்த மணிப்பூர் காவல்துறை ஜூலை 20ம் தேதி 4 பேரை கைது செய்தது. ஜூலை 22ம் தேதி அன்று சிறுவன் ஒருவன் பிடிபட்டான். 6வது குற்றவாளி ஜூலை 23ம் தேதியும் 7வது குற்றவாளி ஜூலை 24 அன்றும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், மணிப்பூர் காவல்துறைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. 27 வழக்குகளில் சுமார் இரண்டரை மாதம் தீவிரமாக விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகள் நேற்று கவுகாத்தியில் நீதிமன்றத்தில் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

குற்றப்பத்திரிகையில் 6 பேர் மீது கூட்டு வன்புணர்வு, கலவரம், கொலை, கடத்தல், குற்றச்சதி ஆகிய பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு எதிராக உரிய ஆதாரங்களுடன் சிறார் நீதி வாரியத்தில் தனி அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News