arti dogra - உச்சம் தொட உயரம் ஒரு தடையல்ல..! IAS அதிகாரி ஆன 3.5 அடி ஆர்த்தி டோக்ரா
arti dogra - வாழ்க்கையில் உச்சம் தொடுவதற்கு உயரம் ஒரு தடையல்ல என்பதை தனது சாதனையால் தகர்த்து எறிந்த 3 அடி உயர பெண் ஐஏஎஸ் -ன் வரலாற்றை படிங்க.;
arti dogra - உயரமான இடத்தை பிடிப்பதற்கு உயரம் ஒரு தடை இல்லை என்பதை உலகுக்கு உரைத்த 3.5 அடி ஐஏஎஸ் அதிகாரி, ஆர்த்தி டோக்ரா பல தடைகளையும் முறியடித்து முன்னேறியவர்.
ஆர்த்தி டோக்ரா போன்ற ஒருவரைப் பற்றி தெரிந்துகொண்டால் அவரைப்போலவே உண்மையாக, ஆர்வத்துடன் கடினமாக உழைத்தால், நீங்கள் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியை அடைவீர்கள். அவரைப்பற்றி படிங்க..நீங்களும் அவரைப்போல முன்னேறுங்க..!
3.5 அடி உயரம் :
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பிறந்தவர் ஆர்த்தி டோக்ரா. அவரது உயரம் வெறும் 3.5 அடி மட்டுமே. இவர் கர்னல் ராஜேந்திரா மற்றும் பள்ளி முதல்வராக இருக்கும் குங்கும் டோக்ரா ஆகிய தம்பதியின் மகள். ஆர்த்தி குள்ளமாக பிறந்துவிட்டாரே என்று அந்த பெற்றோர் முடங்கிவிடவில்லை. அவர்கள் டோக்ராவுக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் அவருக்கு துணையாக நின்றனர்.
ஆர்த்தி பிறந்தபோது, சாதாரணப் பள்ளியில் அவளால் படிக்க முடியாது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். ஆனால் எல்லா முரண்பாடுகளையும் முறியடித்து, டோக்ரா டேராடூனில் உள்ள புகழ்பெற்ற பெண்கள் பள்ளியில் பயின்றார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.
சிறுவயதிலிருந்தே உடல்ரீதியான பாகுபாடுகளை எதிர்கொண்ட ஆர்த்தி டோக்ரா தனது நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஒருபோதும் கைவிடவில்லை. அவர் ஐஏஎஸ் தேர்வு எழுதினார். அவர் முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றார்.
முதல் முயற்சியில் வெற்றி :
ஆர்த்தி டோக்ரா தனது சிவில் சர்வீசஸ் தேர்வில் தனது முதல் முயற்சியில் 2005 ம் ஆண்டில் AIR-56 உடன் தேர்ச்சி பெற்றார். அவர் ராஜஸ்தான் கேடர் 2006 பேட்சைச் சேர்ந்தவர். அங்கிருந்து, அர்ப்பணிப்புள்ள பொது ஊழியராக அவரது பயணம் தொடங்கியது. அன்றிலிருந்து ராஜஸ்தான் அரசில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
நிர்வாகத்தில் தனது வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்து, ஆர்த்தி டோக்ரா செய்த பணிகள் அத்தனையும் தலைப்புச் செய்திகளாகின. முதலில் அவரது உயரம் வெளிப்படையாக எல்லோரையும் கவனிக்க வைத்தாலும் பின்னர் அவரது திறமையான பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.
arti dogra- எண்ணற்ற திட்டங்கள் :
பிகானேர் மாவட்ட கலெக்டராக இருந்த ஆர்த்தி, திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத சமுதாயத்தை உருவாக்க 'பாங்கோ பிகானோ' பிரச்சாரத்தை தொடங்கினார். ஸ்வச்சதா பணி மக்களின் நடத்தை மற்றும் மனநிலை மாற்றத்தில் கவனம் செலுத்தியது. அவரது பணியை மாநில அரசு அங்கீகரித்தது மட்டுமின்றி, பிரதமர் மோடியின் பாராட்டையும் பெற்றது.
இரத்த சோகைக்கு எதிரான மிஷன் மற்றும் 'மா' போன்ற பிற திட்டங்களையும் அவர் தொடங்கினார். அவர் பிகானரின் DM ஆக இருந்தபோது, அவர் 'மகள்களுக்கான டாக்டர்கள்' என்ற திட்டத்தைத் தொடங்கினார். அந்த திட்டத்தில் மருத்துவர்கள் தங்கள் சொந்த மருத்துவமனைகளில் பிறக்கும் அனாதை, ஏழை மற்றும் ஆதரவற்ற பெண் குழந்தைகளை தத்தெடுக்க ஊக்குவித்தார். இந்த திட்டம் அவருக்கு நல்ல பேரை வாங்கித்தந்தது.
அஜ்மீர் கலெக்டராக இருந்த அவர், மாற்றுத்திறனாளிகளை வாக்களிக்க ஊக்குவித்தார். அனைத்து தொகுதிகளிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிப்பதில் பங்கேற்க சக்கர நாற்காலி மற்றும் வாகனங்களை ஏற்பாடு செய்தார்.
arti dogra- ரோல் மாடல் :
கோடிக்கணக்கான ஐஏஎஸ் படிக்கும் மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் ஆர்த்தி டோக்ரா தனது பணிகளை அர்ப்பணிப்புடன் சிறப்பாகச் செய்துள்ளார். தற்போது ஆர்த்தி ராஜஸ்தானின் அஜ்மீர் கலெக்டராக உள்ளார்.
ஆர்த்தி டோக்ரா பெற்ற விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் :
1. விலைமதிப்பற்ற மகள் விருது
2. ஆர்த்தி டோக்ரா, அஜ்மீர் சட்டமன்றத் தேர்தலில் மாவட்ட தேர்தல் அதிகாரியாக சிறப்பாக செயல்பட்டதற்காக இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமிருந்து 2019 ஆம் ஆண்டு தேசிய விருதைப் பெற்றார்.
3. ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, ஆர்த்தி டோக்ராவின் சிறந்த நிர்வாகத்திற்காக அவருக்கு விருது வழங்கினார். இவரை ராஜஸ்தானின் தற்போதைய முதல்வர் அசோக் கெலாட்டும் பாராட்டியுள்ளார்.